போபால்:

ர் இந்தியா விமானத்தில், பயணிக்கு  வழங்கப்பட்ட காலை உணவில் கரப்பான் பூச்சி கிடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து, பயணி புகார் அளித்தும், ஏர்.இந்தியா நிறுவனம் நடவடிக்கை எடுக்க மறுத்ததால்,இதுகுறித்து சமூக வலைதளங்களில் பதிவு செய்து நீதி கேட்டுள்ளார் அந்த பயணி.

சம்பவத்தன்று ரோகித் ராஜ் சிங் சவுகான் என்ற பயணி ம.பி. மாநில தலைவர் போபாலில் இருந்து மும்பைக்கு சென்றுள்ளார். அவருக்கு விமானத்தில் காலை உணவு வழங்கப்பட்டது.

உணவு பொட்டலத்தை திறந்து பார்த்த சவுகான் அதிர்ச்சி அடைந்தார். தனக்கு வழங்கப்பட்ட உணவின் இடையே இறந்த நிலையில் கரப்பான் பூச்சியும் கிடந்தது. இதுகுறித்து உடனே விமான ஊழியர்களிடம் புகார் கூறினார்.

ஆனால், அவர்கள் இந்த சம்பவம் குறித்து எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதுகுறித்து மேலதிகாரிகளிம் புகார் தெரிவித்தும் தகுந்த நடவடிக்கை எடுக்காததால்,  உணவில் கரப்பான் பூச்சி கிடந்ததை வீடியோவாக எடுத்திருந்த சவுகான், அதை சமுக வலைதளங்களில் பகிர்ந்து, ஏர்இந்தியா மீது நடவடிக்க எடுக்க வலியுறுத்தி உள்ளார்.

இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.