டில்லி:

ர்செல்- மேக்சிஸ் வழக்கில் முன்ஜாமின் பெற்றுள்ள  முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், அவரது மகன் கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய விதிக்கப்பட்ட ஏப்ரல் 26வரை நீட்டித்து நீதி மன்றம் உததரவிட்டு உள்ளது.

ஏர்செல் மேக்சிஸ் விவகாரத்தில் முறைகேட நடைபெற்றதாக கூறி,  அமலாக்க துறையும், சி.பி.ஐ.யும் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் சிதம்பரம் மற்றும் கார்த்தி சிதம்பரம் தீது தனித்தனியாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது தொடர்பான வழக்கு  டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில்  நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் கடந்த சில ஆண்டுகளாகசிதம்பரம் மற்றும் கார்த்தி சிதம்பரம்  ஜாமினில் உள்ளனர்.

இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அதைத்தொடர்ந்து இருவரையும் கைது செய்ய விதித்துள்ள தடையை ஏப்ரல்  26ந்தேதிவரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.