டெல்லி:

ட்டவிரோத பணபரிமாற்றம் தொடர்பான  வழக்கில் ஏர்செல் சிவசங்கரனின் ரூ. 224 கோடி மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கி உள்ளது.

ஏர்செல் தொலை தொடர்பு நிறுவனத்தின் முன்னாள் உரிமையாளரான சிவசங்கரன், ஐடிபிஐ வங்கியில் ரூ.470 கோடி கடன் பெற்று திருப்பிச் செலுத்தவில்லை என்று கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில், சிவசங்கரன் மீது, சட்ட விரோத பண பரிமாற்ற தடுப்பு சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

இந்த வழக்கு தொடர்பாக ஏற்கனவே சிவசங்கருக்கு சொந்தமான  சென்னை உட்பட பல இடங்களில் சோதனைகள் நடத்தப்பட்டு, ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், சிவசங்கரனுக்கு சொந்தமான ஏர்ஸல் சன் ஷைன் மற்றும் ஷிவா வெஞ்சர்ஸ் நிறுவனங்களும் கடன் வாங்கியது தெரிய வந்தது.

இதையடுத்து சிவசங்கருன்கு சொந்தமான சென்னை திநகரில் இருக்கும் கமர்ஷியல் அலுவலகம், எம்ஆர்சி நகரில் உள்ள நிலம், அலுவலகம் உள்பட ரூ.224 கோடி மதிப்பிலான சொத்துக்கள் முடக்கப்பட்டு உள்ளதாக அமலாக்கத்துறை அறிவித்து உள்ளது.