செக்கச்சிவந்த வானம்’ படத்தைத் தொடர்ந்து, ‘பொன்னியின் செல்வன்’ படத்தை இயக்குவதில் ஆர்வமாகியுள்ளார் மணிரத்னம். இதில் நடிக்க கார்த்தி, ஜெயம் ரவி, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட பல நடிகர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

இந்நிலையில், கேன்ஸ் திரைப்பட விழாவில் தனது மகள் ஆராத்யாவுடன் கலந்து கொண்டார் ஐஸ்வர்யா ராய்.

தற்போது நடிப்பில் கவனம் செலுத்துவதில்லையே என கேட்ட செய்தியாளர்களிடம் , மணிரத்தினம் படத்தில் நடிக்கிறேன் அவரது படத்தில் நடிக்க நான் ஒப்புக்கொண்டேன் என்றெல்லாம் சொல்ல முடியாது. என் குருவின் படத்தில் நடிக்க நான் எப்போதும் மகிழ்ச்சியுடன் தயாராக இருப்பேன். மணிரத்னம் இதுபற்றி அதிகாரபூர்வ அறிவிப்பு எதுவும் வெளியிடவில்லை என்றாலும், நான் இப்போது சொல்கிறேன் என கூறியுள்ளார்.