‘நின்னு கோரி’ ‘மஜிலி’ தொடர்ந்து சிவா நிர்வானா இயக்கவுள்ள அடுத்த படத்திலும் நானியே நடிக்க ஒப்பந்தமானார்.

‘டக் ஜெகதீஷ்’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தில் நானிக்கு நாயகிகளாக ரீத்து வர்மா மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகிய இருவரும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். தமன் இசையமைப்பாளராகப் பணிபுரியவுள்ளார்.

சாஹூ மற்றும் ஹரிஷ் இருவரும் ‘டக் ஜெகதீஷ்’ படத்தைத் தயாரிக்கின்றனர். இந்த படம் 2020-ம் ஆண்டு ஜனவரியில் ஷூட்டிங் ஆரம்பிக்க படக்குழு திட்டமிட்டுள்ளது.