பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி. நேற்று கிறிஸ்துமஸ் ஸ்பெஷலாக போட்டியாளர்கள் மற்றவர்களுக்கு கிப்ட் கொடுக்கலாம் என கூறப்பட்டது.

நேற்றைய நாளில் பிக் பாஸ் வீட்டின் அடுத்த வார கேப்டனை தேர்ந்தெடுக்கும் டாஸ்க் நடைபெற்றது. அதில் ரியோ, சோம் மற்றும் ஆரி ஆகியோர் பங்கேற்றனர்.

இறுதியில் இந்த டாஸ்கினை முதலில் செய்து முடித்த ஆரி தான் வெற்றியாளர் என அறிவிக்கப்பட்டார்.

இந்நிலையில் 83-வது நாளான இன்று, உலக நாயகன் கமல் தோன்றி பேசினார். போட்டியாளர்கள் செய்த தவறுகளை சுட்டிக்காட்டிய ரசிகர்களை பாராட்டினார் கமல். மக்கள் தீர்ப்பு தான் இறுதியானது என்பதை அவர்களும் உணரும் நாள் நெருங்கிக் கொண்டிருக்கிறது என்பதை தெரிவித்தார்.

அனிதா இந்த வாரம் எவிக்டட் என்று செய்திகள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது .