‘பாகுபலி’ யை தொடர்ந்து ராஜமவுலி இயக்கத்தில் உருவாகவுள்ள RRR திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்ற RRR பத்திரிகையாளர் சந்திப்பில் வெளியிடப்பட்டது.

ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர் , நடிகை ஆலியா பட் , பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன், சமுத்திரக்கனி உட்பட பலர் நடிக்கவுள்ளனர்.

இறுதிக்கட்ட படப்பிடிப்பில் அஜய் தேவ்கன் காட்சிகளின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளது.

இது குறித்துஅஜய் தேவ்கன் தனது ட்விட்டர் பதிவில் “கடந்த 2012ஆம் ஆண்டு முதல் ராஜமௌலி சாரை தெரியும். அப்போதிலிருந்து பல சுவாரஸ்ய வழிகளில் நாங்கள் இணைந்திருக்கிறோம். #RRR படத்தில் அவரோடு பணிபுரிவது மகிழ்ச்சியாகவும் கவுரவமாகவும் உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

அவருக்குப் பதிலளிக்கும் விதமாக இயக்குநர் ராஜவுமலி “எனக்கும் அதே உணர்வு தான் சார். முதல் நாள் படப்பிடிப்பு அற்புதமாக இருந்தது” என்று தெரிவித்துள்ளார்.

சுமார் 400 கோடி ரூபாய் பொருட்செலவில் உருவாகும் இந்தப் படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

முதலில் ஜூலை 30-ம் தேதி வெளியீடாக இருந்த இந்தப் படம், தற்போது அக்டோபர் வெளியீட்டுக்கு மாற்றப்பட்டுள்ளது.