DISGUSTED & ANGRY to read reports of “educated” persons attacking doctors in their neighbourhood on baseless assumptions. Such insensitive people are the worst criminals😡#StaySafeStayHome #IndiaFightsCorona
— Ajay Devgn (@ajaydevgn) April 12, 2020
இந்தியாவில் கரோனா தொற்றைக் கட்டுப்படுத்த 21 நாள் தேசிய ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பல்வேறு முக்கிய நிகழ்வுகள், திரைப்பட வெளியீடுகள், படப்பிடிப்புகள் ஆகியவை தள்ளி வைக்கப்பட்டு வருகின்றன.
நாளுக்கு நாள் கரோனா பாதித்தோர் எண்ணிக்கை இந்தியாவில் அதிகரித்துக் கொண்டே வருவதால் மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்கள் பலரும் இரவு, பகல் பாராது கடினமாக உழைத்து வருகின்றனர்.
ஆனால் ஆங்காங்கே மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்கள் தாக்கப்படுவதாக அவ்வப்போது செய்திகள் வந்தவண்ணம் உள்ளன.
இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் அஜய் தேவ்கன் ”அடிப்படையற்ற கற்பனைகளைச் செய்துகொண்டு தனது பக்கத்து வீடுகளில் இருக்கும் மருத்துவர்களை ‘படித்தவர்கள்’ தாக்குவதாக வரும் செய்திகளைப் படிக்கும்போது கோபமாகவும் எரிச்சலாகவும் இருக்கிறது. இதுபோன்ற சொரணையற்ற மக்கள் மோசமான குற்றவாளிகள்” என்று கூறியுள்ளார்.