மும்பை: மகாராஷ்டிரா துணை முதலமைச்சர் அஜித் பவார் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினார்.

மகாராஷ்டிரா துணை முதலமைச்சரும், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான அஜித் பவாருக்கு அக்டோபர் 26ம் தேதி கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. உடல்நிலை சீராக இருந்தாலும், மருத்துவர்களின் ஆலோசனைப்படி, அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

இந் நிலையில் சிகிச்சை பெற்று வந்த அவருக்கு கொரோனா நெகட்டிவ் என்று கண்டறியப்பட்டது. சில நாட்கள் வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்ள உள்ளதாக கூறியுள்ளார். தமக்கு சிகிச்சையளிக்க மருத்துவர்கள், சுகாதார பணியாளர்களுக்கு நன்றியும் தெரிவித்தார்.