சிட்னி

ன்றைய ஆஸ்திரேலியா இந்தியா கிரிக்கெட் போட்டியில் அஜித் ரசிகர்கள் நடராஜன் போஸ்டருடன் வந்து கொண்டாடி உள்ளனர்.

இன்று ஆஸ்திரேலியாவின் சிட்னி மைதானத்தில் இந்தியா – ஆஸ்திரேலியாவுக்கான மூன்றாவது டி20 கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இதில் இந்திய அணித்தலைவர் விராட் கோலி டாஸ் வென்று பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.  இந்த மூன்றாவது டி20 தொடரில் 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 186 ரன்களைக் குவித்த ஆஸ்திரேலிய அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வென்றுள்ளது.   இதனால் ஆஸ்திரேலியாவுக்கான டி20 தொடரை 2-1 என இந்திய அணி வென்றுள்ளது.

இந்திய அணியிலொ தமிழக வீரர் நடராஜன் இடம் பெற்றதிலிருந்தே கிரிக்கெட் ரசிகர்கள் மட்டுமல்லாது பலதரப்பிலிருந்தும் வாழ்த்துகள் குவிந்த வண்ணம் இருக்கின்றன. உலக அளவில் தனது திறமையால் தமிழகத்துக்குப் பெருமை தேடித்தந்த நபராக நடராஜன் மாறியிருக்கிறார்.அதற்கேற்ப இத்தொடரின் தொடர் ஆட்டநாயகன் விருதைப் பெற்ற ஹர்திக் பாண்டியா, அதை நடராஜன் கையில் கொடுத்து நெகிழ்ந்திருப்பதையும் கிரிக்கெட் ரசிகர்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

இந்த கிரிக்கெட் போட்டியை நேரில் காண வந்த அஜித் ரசிகர்கள் சிலர் நடராஜனுக்கு வாழ்த்து தெரிவித்து அச்சடிக்கப்பட்ட போஸ்டரை கையில் வைத்திருந்ததைப் படம்பிடித்து ஆஸ்திரேலிய ஊடகங்கள் ஒளிபரப்பியதால் உலகம் முழுக்க அந்த போஸ்டர் வைரலானது. இந்திய அணியில் இடம் பெற்று விக்கெட்டுகளைக் குவித்து சாதனை செய்துவரும் தமிழக வீரர் நடராஜனுக்கு எங்களுடைய வாழ்த்துக்கள் என்று அந்த போஸ்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது.