வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்கவிருந்த படம் ‘மாநாடு’. தொடக்கத்திலிருந்தே பல இடையூறுகளை சந்தித்து வந்தது .

இதனிடயே வாரத்தில் 2 நாட்கள் விடுமுறை வேண்டும், மாதத்தில் 15 நாட்களில் படப்பிடிப்பு என பல்வேறு கண்டிஷன்களைச் சிம்பு வைப்பதாக தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். சிம்பு நடிக்கவிருந்த ‘மாநாடு’ படத்தினை கைவிடுவதை தவிர்க்க இயலவில்லை. சிம்புவின் அன்பும் நட்பும் தொடரும்.வெங்கட் பிரபு இயக்க மாநாடு படம் எனது தயாரிப்பில் புதிய பரிமாணத்தோடு தொடங்கும். விரைவில் அந்த அறிவிப்பு வரும். அனைவருக்கும் நன்றியும் அன்பும்” என்று தெரிவித்திருந்தார் சுரேஷ் காமாட்சி.

இந்நிலையில் சிம்புவுக்கு பதில் மாநாடு படத்தில் நடிக்கப் போவது சிவகார்த்திகேயன், தனுஷ் ஆகியோரது பெயர் அடிபட, யாரும் எதிர்ப்பார்க்காத விதத்தில் மாநாடு கதை அஜித்திடம் சென்றிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. வெங்கட் பிரபுவுடன் அஜித் அடுத்ததாக இணைவது உறுதியாகியுள்ளது.