சிரஞ்சீவி நடிப்பில் வெளியான பிரம்மாண்ட படைப்பான ‘சைரா நரசிம்ம ரெட்டி’ படத்தை இயக்கியவர் சுரேந்தர் ரெட்டி.

‘சைரா’ படத்துக்குப் பிறகு சுரேந்தர் ரெட்டி இயக்கவுள்ள படம் தொடர்பாக பல்வேறு தகவல்கள் வெளியான வண்ணம் இருந்தன. ஆனால், எதுவுமே அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படாமல் இருந்தது.

இந்நிலையில் ஏ.கே.எண்டர்டையின்மெண்ட்ஸ் நிறுவனம் புதிய படத்தின் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்தப் படத்தை சுரேந்தர் ரெட்டி இயக்கவுள்ளார். நாகார்ஜுனாவின் இளைய மகன் அகில் நாயகனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

இந்தப் படம் த்ரில்லர் பாணியில் இருக்கும் எனவும், பெரும் பொருட்செலவில் உருவாகவுள்ளது என்றும் படக்குழு தெரிவித்துள்ளது.