ஜினிகாந்துக்கு வில்லனாக 2.0 படத்தில் நடித்தவர் அக்‌ஷய்குமார். இந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகர் என்று இவர் பெயரை ஃபோர்ப்ஸ் இதழ் கணித்து வெளியிட் டிருந்தது. இவர் தினமும் காலையில் மாட்டு கோமியம் குடிப்பதாக தெரிவித்திருக்கிறார்.
டிஸ்கவரி தொலைக்காட்சி சேனலின் ‘மேன் வெர்சஸ் வைல்ட்’ மிகவும் பிரபலம். இந்த நிகழ்ச்சி வழங்கும் பியர் கிரில்ஸ் அடர்ந்த காட்டுப்பகுதியில் ஆபத்தான சூழ்நிலைகளில் எவ்வாறு உயிர் பிழைத்திருப்பது என்பதை செயல்முறையில் படமாக்கி வெளியிடு கிறார்.


பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் சமீபத் தில் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள் ளார். பியர் கிரில்ஸ், அக்‌ஷய் குமார் மற்றும் காலா பட நடிகை ஹூமா குரேஷி ஆகியோர் வீடியோ கலந்துரையாடினர். அப்போது, யானை சாணத்தில் போட்ட டீயை குடித்தீர்களாமே என அக்‌ஷய் குமாரிடம் கேட்க அதை ஒப்புக் கொண்ட அக்‌ஷய்,’ நான் தினமும் மாட்டுக் கோமியம் குடிப்பதால், யானை சாண டீ எனக்கு பெரிய விஷயமாக தெரியவில்லை என்றார்.
ஆயுர்வேத சத்துக்களை உள்ளடக்கிய தாக உள்ளத்தென்பதால் கோமியத்தை குடிப்பதாக அவர் தெரிவித்தார்.