அக்‌ஷய் குமாரை சந்திக்க அவரது தீவிர ரசிகர் ஒருவர் குஜராத் மாநிலத்தின் ட்வார்கா நகரிலிருந்து மும்பைக்கு 900 கிமீ நடந்தே சென்றுள்ளார்.

அக்‌ஷய்குமாரின் வீட்டை அடைய அந்த ரசிகருக்கு 18 நாட்கள் ஆகியிருக்கிறது. இதை தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அக்‌ஷய் குமார் வீடியோவுடன் வெளியிட்டுள்ளார்.

இது போன்ற விஷயங்களை செய்யவேண்டாம் என்று உங்களை கேட்டுக் கொள்கிறேன். உங்கள் நேரத்தையும், சக்தியையும் உங்கள் வாழ்க்கையை மேம்படுத்த பயன்படுத்துங்கள். அதுதான் எனக்கு மகிழ்வை தரும் என கூறியுள்ளார் அக்‌ஷய் குமார்.