நீண்ட இடைவெளிக்குப் பிறகு ப்ரியதர்ஷன் மற்றும் அக்‌ஷய்குமார் இருவரும் ஒரு புதிய படத்தில் மீண்டும் இணையவுள்ளனர்.

13 ஆண்டுகளுக்கு பிறகு அக்‌ஷய்குமார் – ப்ரியதர்ஷன் கூட்டணியில் உருவாகவுள்ள இப்படத்தை அக்‌ஷய் குமாரே தயாரிக்கவும் செய்கிறார்.

முழு நீள நகைச்சுவை படமாக உருவாகவுள்ள இப்படத்துக்கு இன்னும் தலைப்பு முடிவு செய்யப்படவில்லை.

வரும் டிசம்பர் மாதம் படவேலைகளை தொடங்க நானும் அக்‌ஷயும் தீர்மானித்தோம். ஆனால் கரோனாவால் அனைத்தும் தாமதமாகி விட்டது என ப்ரியதர்ஷன் கூறியுள்ளார் .