உலகின் முன்னணி ஆன்லைன் வணிக நிறுவனமான அலிபாபா நிறுவன தலைவர் ஜாக் மா கடந்த சில மாதங்களாக பொது நிகழ்ச்சி எதிலும் கலந்து கொள்ளவில்லை.

இதனை தொடர்ந்து இவர் மாயமானதாக உலகம் முழுதும் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் இவர் சீன அரசின் கவனிப்பில், வீட்டு கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின.

இந்த தகவல் எதற்கும் ஜாக் மா தரப்பில் இருந்து எந்த ஒரு விளக்கமோ அறி்க்கையோ இதுவரை வெளியாகாத நிலையில் இன்று அவர் மக்கள் முன் தோன்றியதாக செய்திகள் வெளியாகியிருக்கிறது.

அலிபாபாவை துவங்குவதற்கு முன் ஆசிரியராக பணியாற்றிய ஜாக் மா ஆசிரியர்களுக்காக நடத்தப்பட்ட இணையதள கருத்தரங்கு ஒன்றில் வீடியோ மூலம் கலந்துகொண்டு உரையாற்றினார்.