புதுடெல்லி: கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 1 முதல் 8ம் வகுப்புவரை படிக்கும் மாணாக்கர்கள் அனைவரும், இறுதியாண்டு தேர்வெழுதினாலும் எழுதாவிட்டாலும் அடுத்த வகுப்புகளுக்கு அனுப்பப்படுவார்கள்(பாஸ்) என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் நாடெங்கிலும் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் கொரோனா வைரஸ் பாதித்தோரின் எண்ணிக்கை விரைவில் 1000ஐ தொட்டுவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், நாடெங்கிலும் தற்போது 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், 1 முதல் 8ம் வகுப்பு வரை படிக்கும் மாணாக்கர்கள், பள்ளி இறுதியாண்டு தேர்வை எழுதினாலும் சரி; அல்லது எழுத முடியாவிட்டாலும் சரி, அவர்கள் அடுத்த வகுப்புகளுக்கு(பாஸ்) அனுப்பப்படுவார்கள் என்று கேந்திரிய வித்யாலயா பள்ளிகளின் நிர்வாகம் அறிவித்துள்ளது.