டில்லி:

பாரதிய ஜனதாவின் அனைத்து காவலாளிகளும் திருடர்கள் என்று காங்கிரஸ் தலைவர்  ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்தார்.

பா.ஜனதா தலைமைக்கு கர்நாடக முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா ரூ.1,800 கோடி கொடுத்த பரபரப்பு செய்தி வெளியானது. இதை மேற்கோள்காட்டி,  காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ‘டிவிட்’  பதிவிட்டுள்ளார்.

அதில், “பா.ஜனதாவின் அனைத்து காவலாளிகளும் திருடர்கள். நரேந்திர மோடி, அருண் ஜெட்லி, ராஜ்நாத் சிங்…” என்று அவர் கூறியுள்ளார்.

ஜார்கண்ட் மாநிலத்தில், சம்பளம் வழங்கப்படாததை கண்டித்து, சுமார் 10 ஆயிரம் காவலாளிகள் போராட்டம் நடத்தியதை சுட்டிக்காட்டி, ராகுல் காந்தி மற்றொரு பதிவை வெளியிட்டுள்ளார்.

அதில், “காவலாளிகளுக்கு பின்னால் மறைந்து கொள்ளும் மோடிக்கு காவலாளிகள் குறித்து கவலை இல்லை. இப்போதாவது அவர்களை பற்றி அவர் சிந்தித்து பார்க்க வேண்டும்” என்று அவர் கூறியுள்ளார்.