சென்னை

ன்று முதல் தமிழகத்தில் அனைத்துக் கல்லூரிகளும் பள்ளிகளில் 9 மற்றும் 11 ஆம்  வகுப்புக்களும் தொடங்க உள்ளன.

கடந்த ஆண்டு மார்ச் முதல் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளிகள்,கல்லூரிகள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களும் அடைக்கப்பட்டன.    சென்ற ஆண்டுக்கான தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு அனைவரும் பாஸ் என அறிவிக்கப்பட்டனர்.  இப்போது கொரோனா பாதிப்புக்கள் குறைந்து வருவதால் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

கடந்த டிசம்பர் மாதம் கல்லூரி இறுதி ஆண்டுகளுக்கு எற்கன்வே வகுப்புக்கள் தொடங்கப்பட்டிருந்தன.  10 மற்றும் 12 ஆம் வகுப்புக்களுக்குப் பள்ளிகள் திறக்கப்பட்டிருந்தன.  இன்று முதல் தொழில்நுட்பம், பொறியியல், கலை அறிவியல்,உள்ளிட்ட அனைத்து கல்லூரிகளும் திறக்கப்படு வாரம் 6 நாட்கள் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளன.

இன்று முதல் பள்ளிகளில் 9 ஆம் வகுப்பு மற்றும் 11 ஆம் வகுப்புகள் படிக்கும் மாணவர்களுக்குப் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புக்கள் நடைபெற உள்ளன.   அத்துடன் மாணவர்களுக்கான விடுதிகளும் செயல்பட உள்ளன.  கடும் கட்டுப்பாட்டு விதிகளுடன் கல்வி நிலையங்கள் செயல்பட உள்ளன.