டெல்லி:
நாடு முழுவதும் மே 17 ஆம் தேதி வரை விமான சேவைகள் ரத்து ரத்து செய்யப்படுவதாக  விமான போக்கு வரத்துத்துறை அமைச்சகம் தெரிவித்து உள்ளது.
கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக 3வது முறையாக மேலும் 2 வாரம் ஊரடங்கை நீட்டித்து மத்திய அரசு அறிவித்து உள்ளது. சில தொழிற்சாலைகள், நிறுவனங்கள் இயங்க தளர்வு அளிக்கப்பட்டுள்ள நிலையில், போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. அதுபோல மே 17 வரை உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமான சேவை ரத்து தொடரும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
இதுகுறித்து விமான போக்குவரத்துத்துறைஅமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  கொரோனா பரவலைத் தடுக்க, பொது முடக்கம் சில தளர்வுகளுடன் நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், நாடு முழுவதும் உள்நாட்டு, வெளிநாட்டு விமான சேவைகள் ரத்து மே 17 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. சரக்கு விமான போக்குவரத்து தொடர்ந்து நடைபெறும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.