டெல்லி:

காங்கிரஸ் செயற்குழு நாளை (10ம் தேதி) டெல்லியில் கூடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், உச்சநீதி மன்றம் இன்று அயோத்தி வழக்கில் தீர்ப்பு வழங்கும் நிலையில், இன்று காலை காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் கூடுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் வரும் 18ம் தேதி தொடங்குகிறது. இதையொட்டி   காங்கிரஸ் கட்சியின் செயற்குழு வரும் 10ம் தேதி, கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா தலைமையில் கூடுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், உச்சநீதி மன்றம் இன்று அயோத்தி வழக்கில் தீர்ப்பு வழங்கும் என அறிவித்துள்ள நிலையில், காங்கிரஸ் செயற்குழு கூட்டம் நாளைக்கு பதில் இன்று (9ந்தேதி) காலை 9.45 மணிக்கு கூடும் என  அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர் நேற்று இரவு அறிவித்து உள்ளார்.