சென்னை

பாஜகவின் எஸ் வி சேகரை விடுதலை சிறுத்தைகள் கட்சி துணைப் பொதுச் செயலாளர் ஆளூர் ஷா நவாஸ் தனது டிவிட்டரில் கிண்டல் செய்துள்ளார்.

சமீபத்தில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஒரு பெண் செய்தியாளரை கன்னத்தில் தட்டிக் கொடுத்து பாராட்டினார்.   அதற்கு அந்தப் பெண் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.  அதை ஒட்டி ஆளுநர் அந்தப் பென்ணை தனது பேத்தி போல் நினைத்ததாகவும் நடந்த சம்பவத்துக்கு மன்னிப்பு கோருவதாகவும் அறிவித்தார்.   இந்நிலையில் பாஜக வை சேர்ந்த நடிகர் எஸ் வி சேகர் ஒரு பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார்.

   ஆளூர் ஷா நவாஸ்

அந்தப் பதிவில் அவர் பெண் பத்திரிகையாளர்களைக் குறித்து தவறாக குறிப்பிட்டதாக கூறி அவருக்கு கடும் எதிர்ப்பு எழுந்தது.   அது மற்றொருவர் பதிவு எனவும் தாம் படிக்காமல் பதிந்ததாகவும் கூறி சேகர் மன்னிப்பு கேட்டுக் கொண்டார்.    ஆயினும் அவர் மீது பல புகார்கள் அளிக்கப்பட்டதை ஒட்டி மத்திய குற்றப் பிரிவு காவலர்கள் 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர்.   இந்நிலையில் நடிகர் எஸ் வி சேகர் தலைமறைவாக உள்ளதாக கூறப்படுகிறது.

இது குறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சி துணைப் பொதுச் செயலாளர் ஆளூர் ஷா நவாஸ் ஒரு டிவிட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர்,

பெரியார் மண்ணா?  அது கமிஷனர் ஆபிஸ் பக்கத்தில் 10 கிரவுண்டில் இருக்கு.   அவ்ளோதான் என நக்கல் அடித்தார் எஸ் வி சேகர்.

ஜீயரிலிருந்து சேகர் வரை இவர்கள் வரிந்து கட்டி நின்ற  போதும் வைரமுத்து ஓடி ஒளியாமல் மண்டியிடாமல் நின்றார்.   இப்போது எஸ் வி சேகர் தலைமறைவாம்.

இது பெரியார் மண்ணேதான்!

என பதிந்துள்ளார்.

அவரது இந்த பதிவு பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.