இயக்குநர் ஏ.எல். விஜய்யிடம் இருந்து விவாகரத்து பெற்ற பிறகு படங்களில் கவனம் செலுத்தி வந்த அமலா பால் வாழ்வில் காதல் வந்தது.

அமலா வாழ்வில் மீண்டும் காதல் வந்ததை பார்த்த அவரின் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்தார்கள்.

அமலா பால் மும்பையை சேர்ந்த பாடகர் பவ்னிந்தர் சிங்கை காதலிப்பதாக கூறப்பட்டது.

இந்நிலையில் பவ்னிந்தர் சிங் தான் அமலாபாலுடன் திருமண கோலத்தில் இருக்கும் புகைப்படங்களை தன் இன்ஸ்ட்டாகிராமில் பதிவிட்டுள்ளார் . அப்புகைப்படங்கள் வைரல் ஆனது . அதை தொடர்ந்து வெளியிட்ட புகைப்படங்களை நீக்கிவிட்டார்.

பின் அமலா பாலுக்கு திருமணம் நடக்கவில்லை என்று அவரின் மேனேஜர் விளக்கம் அளித்தார்.

அமலா பாலும், பவ்னிந்தரும் ஒரு இவென்ட்டுக்காக எடுத்த புகைப்படங்களை பார்த்து தான் மக்கள் தவறாக நினைத்துவிட்டதாக கூறப்பட்டது. இந்நிலையில் அமலா பாலும், பவ்னிந்தர் சிங்கும் பிரிந்துவிட்டார்களாம். பவ்னிந்தரை இன்ஸ்டாகிராமில் பின்தொடர்வதை அமலா பால் நிறுத்திவிட்டார். இது அவர்களின் காதல் முறிந்துவிட்டதை உறுதி செய்வது போன்று உள்ளது.

மேலும் பிரையன் சித்தார்த்தா என்பவரும், என் நண்பர்கள் அமலா மற்றும் புவியின் அழகிய திருமண புகைப்படங்கள் என்று கூறி அவர்களின் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டார். பின்னர் அவரும் அந்த புகைப்படங்களை நீக்கிவிட்டார்.