ஸ்ரீநகர்:

காஷ்மீரில் அமர்நாத் யாத்திரை பக்தர்கள் மீது தாக்குதல் நடத்திய பயங்கரவாதி அபு இஸ்மாயில் சுட்டுக் கொல்லப்பட்டான்.

கடந்த ஜூலை மாதம் காஷ்மீர் தெற்கு பகுதியில் இருந்து அமர்நாத் சென்று திரும்பிய பஸ் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த 8 பக்தர்கள் பலியாயினர். 13 பேர் காயமடைந்தனர்.இந்த தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டதாக லஷ்கரே தொய்ப தலைவன் அபு இஸ்மாயிலை பாதுகாப்புபடையினர் தேடி வந்தனர்.

இந்நிலையில் காஷ்மீரின் நவ்ஹாம் வனப்பகுதியில் அபுசலீம் பதுங்கியிருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தவுடன் பாதுகாப்புபடையினர் அந்த இடத்தை சுற்றி வளைத்தனர். அப்போது இரு தரப்பிலும் நடந்த துப்பாக்கிச் சண்டையில் பயங்கரவாதி அபு இஸ்மாயில் சுட்டுக்கொல்லப்பட்டார்.

காவல்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘என்கவுன்டரின் போது அபுசலீமுடன் இருந்த சில பயங்கரவாதிகள் தப்பியோடிவிட்டனர். அவர்களை தேடி வருகிறோம். கொல்லப்பட்ட அபுசலீமிடமிருந்து 2 ஏ.கே.47 துப்பாக்கிகள் உள்ளிட்டவை கண்டெடுக்கப்பட்டது’’ என்றார்.