சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் தீவிரமடைந்து வரும் நிலையில், அம்பத்தூர் தொகுதி திமுக வேட்பாளர் ஜோசப் சாமுவேல் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தமிழகத்தில் கொரோனா வைரஸ்  தொற்று மீண்டும் தீவிரமடைந்து வருகிறது. தேர்தல் பிரசார கூட்டத்தால் பாதிப்பு நாளுக்கு நாள் உயர்ந்து வருவதாக கூறப்படுகிறது. இதனால், பொதுமக்கள் கண்டிப்பாக முக்கவசம் அணிய வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வருகிறது. இதற்கிடையில் கொரோனா தொற்று  பல கட்சி வேட்பாளர்களும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில்,   சென்னை அம்பத்தூர் தொகுதியில் போட்டியிடம்  திமுக வேட்பாளர் ஜோசப் சாமுவேலுக்கு தற்போது கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக ஜோப் உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில், அவருக்கு எடுக்கப்பட்ட சோதனையில் கொரோனா உறுதியாகி உள்ளது. இதையடுத்து அவர்,  சென்னையிலு ஊளுளு  தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.