காந்திநகர்:

சட்டமேதை அம்பேத்கர் 127வது பிறந்தநாள் விழா இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. இந்த வகையில் குஜராத் மாநிலம் வதோதராவில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி நடந்தது. அப்போது பாஜக.வினர் சிலைக்கு மாலை அணிவிக்க வந்தனர்.

அங்கு கூடியிருந்த ஒரு பிரிவினருக்கும் போலீசாருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. எனினும் பெரிய அளவில் அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடக்கவில்லை. மத்திய அமைச்சர் மேனகா காந்தி மற்றும் பாஜக தலைவர்கள் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்துவிட்டு சென்றனர்.

இதன் பின்னர் அங்கு கூடியிருந்தவர்கள் அம்பேத்கர் சிலையை பால், தண்ணீரை கொண்டு சுத்தப்ப டுத்தினர். பாஜக.வினர் வருகை மூலம் சிலை மாசுபட்டுவிட்டது என்று அவர்கள் தெரிவித்தனர். முன்னதாக நேற்று கிரேட்டர் நொய்டாவில் அம்பேத்கர் சிலையை மர்ம ஆசாமிகள் சேதப்படுத்தினர். இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டதை தொடர்ந்து போலீசார் குவிக்கப்பட்டனர்.

பாஜக எம்பி கிரித் பிரேம்ஜிபாய் சோலாங்கி மற்றும் உறுப்பினர்கள் சிலர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்க சென்றனர். அப்போது சுயேட்சை எம்எல்ஏ ஜிக்னேஷ் மேவானி ஆதரவாளர்கள் அவர்களை த டுக்க முயன்றனர். போலீசார் தலையிட்டு பாஜகவினர் மாலை அணிவிக்க செய்தனர். இது தொடர்பாக 5 தலித்களை போலீசார் கைது செய்தனர்.