ஆம்புலனஸ் மூலம் உதவி.. கொரொனா வடிவில் எமன்..

திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர் கணேசன் (22). இவர் திருப்பூர் மாவட்டம் மங்கலத்தில் தங்கி அவிநாசிபாளையம் பகுதியில் 108 ஆம்புலன்ஸில் உதவியாளராக (டெக்னிஷியனாக) வேலை பார்த்து வந்தார். இவர் கடந்த 15-ம் தேதி திண்டுக்கல் சென்று வந்த நிலையில் உடல் நிலை பாதிக்கப்பட்டிருந்தார்.

இதனைத் தொடர்ந்து இவருக்குச் செய்யப்பட்ட சோதனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.  உடனடியாக இவர் கடந்த 18-ம் தேதி கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

தொடர்ந்து ஒரு வார காலமாகக் கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில், நேற்று அதிகாலை 3 மணிக்குச் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

ஆம்புலன்ஸ் மூலமாகப் பல கொரோனா நோயாளிகளை மருத்துவமனை அழைத்துச்சென்று அவர்களின் சிகிச்சைக்கு உதவிய கணேசன் அதே கொரோனாவினாலேயே பாதிக்கப்பட்டு இவ்வளவு சிறிய வயதிலேயே மரணமடைந்தது பெரிதும் அதிச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  – லெட்சுமி பிரியா