கொலை நடந்த கப்பல்

ன்னைப் பார்த்து சிரித்த மனைவியை கணவன் கொலை செய்த சம்பவம் அமெரிக்காவில் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.

கொலை செய்த கென்னத் மன்ஸானெரெஸ்

அமெரிக்க கடற்பகுதியில் சென்று கொண்டிருந்த கப்பலில் இச் சம்பவம் நடந்துள்ளது.

இக் கப்பலில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் பயணித்துக்கொண்டிருந்தனர். இவர்களில் கென்னத் மன்ஸானெரெஸ் – கிறிஸ்டி தம்பதியரும் அடங்குவர்.

கடந்த செய்வாய்க்கிழமை அன்று, அந்த சொகுசு கப்பல் அமெரிக்காவின் அலாஸ்கா கடற்பரப்பில் சென்று கொண்டிருந்தது.  அப்போது கென்னத் மன்ஸானெரெஸ், தனது மனைவி கிறிஸ்டியை அடித்து வீழ்த்தியதையும், அவரது உடலை தங்களது அறைக்கு இழுத்துச் சென்றதையும் சில பயணிகள் பார்த்து அதிர்ந்தனர்.

பலியான கிறிஸ்டி

கப்பல் பாதுகாப்பு பிரிவினருக்கு தகவல் சொல்லப்பட்டது.  அவர்கள் மூலம் அமெரிக்காவின் புலனாய்வுத்துறையான எஃப்.பி.ஐ.க்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

தற்போது இந்த வழக்கை எஃப்.பி.ஐ. விசாரித்து வருகிறது. விசாரணையில்,  கென்னத், தனது மனைவி தன்னைப் பார்த்து கிண்டலாக சிரித்துக்கொண்டே இருந்ததாகவும் அதனால் ஆத்திரத்தில் அவரை அடித்ததில், அவர் இறந்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.