நியூயார்க், ஜூன் 9 (ஐஏஎன்எஸ்) புற்றுநோய் நோய்த்தடுப்பு சிகிச்சையில் பயன்படுத்தப்படும் கருவிகளை உபயோகப்படுத்தி, கொரோனா தடுப்பு மருந்து செயல்படுவதற்கு தேவையான இலக்காகக் கூடிய  புதிய கொரோனா வைரஸின் (SARS-CoV-2) பகுதிகளை அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் அடையாளம் கண்டுள்ளனர். இந்த மூலோபாயத்தைப் பயன்படுத்தி, உருவாக்கப்படும் தடுப்பு மருந்து, மக்களுக்கு பாதுகாப்பை அளிக்கும் என்றும் நீண்டகால நோயெதிர்ப்பு சக்தியைத் தரும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர் என்று செல் ரிப்போர்ட்ஸ் மெடிசின் இதழில் வெளியிடப்பட்ட ஆய்வு தெரிவிக்கிறது.

புற்று நோய், பல வழிகளில், ஒரு வைரஸைப் போலவே செயல்படுகிறது, எனவே நோய்த்தடுப்பு சிகிச்சைகள் மூலம் இலக்கு வைக்கக்கூடிய குழந்தை பருவ புற்றுநோய்களின் தனித்துவமான அம்சங்களை அடையாளம் காண அவர்கள் உருவாக்கிய கருவிகளைப் பயன்படுத்தவும், அதைக் கொண்டு, SARS ஐக் கட்டுப்படுத்தும் இலக்குகளாக இருக்கும் சரியான புரத வரிசைகளை அடையாளம் காணவும் ஆராய்ச்சி குழு முடிவு செய்தது. இதற்காக உருவாக்கப்பட்ட கணக்கீட்டு கருவிகளைத் பயன்படுத்தி,  மனித மக்கள்தொகையில் பெரும்பான்மையானவர்களுக்கு இருப்பதாகக் கணிக்கப்பட்ட, நீடித்த நோயெதிர்ப்பு செயல்பாடுகளை தூண்டும் திறனின் அடிப்படையில் வைரஸ் இலக்குகளுக்கு நாம் இப்போது முன்னுரிமை அளிக்க முடியும்” என்று பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தின் மூத்த எழுத்தாளர் ஜான் எம் மாரிஸ் கூறினார்.

“எங்கள் அணுகுமுறை ஒரு தடுப்பு மருந்துக்கான வரைபடத்தை வழங்குகிறது, அது பாதுகாப்பானது மற்றும் பயனுள்ளதாக இருக்கும், மேலும் அவை பெரும் அளவில் தயாரிக்கப்படலாம்” என்று மாரிஸ் மேலும் கூறினார். ஒரு தடுப்பு மருந்து பாதுகாப்பானது மற்றும் பயனுள்ளது என்பதற்கான வாய்ப்பை அதிகரிக்க, ஆராய்ச்சி குழு வைரஸின் பகுதிகளை கஇலக்காக அமைப்பதில் அளவுருக்களுக்கு முன்னுரிமை அளித்தது. மனித நோயெதிர்ப்பு மண்டலத்தில் T – செல்களை (T-CELL) தூண்டும் தன்மையுள்ள மற்றும் சரியான B-செல்களுடன் சேர்ந்து நினைவக B-செல் (MEMORY B – CELL) உருவாவதற்கு வழிவகுக்கும் மற்றும் நீடித்த நோய் எதிர்ப்பு சக்தியை வழங்கும் தன்மைக் கொண்ட வைரசின் பகுதிகளை இலக்குகளாகக் அமைக்க ஆய்வு செய்து வந்தனர்.

அவை, பல தொடர்புடைய கொரோனா வைரஸ்கள் அனைத்திலும் பொதுவாக காணப்படும் SARS-CoV-2 இன் பகுதிகளையும், தொற்றுநோயை அதிகரிக்கும் புதிய பிறழ்வுகளையும் ஆய்வு செய்தனர்.  அதே நேரத்தில் அந்த பகுதிகள் மனிதர்களில் இயற்கையாக காணப்படவில்லை என்பதையும் பாதுகாப்புக் காரணங்களுக்காக உறுதி செய்துக் கொண்டனர். தற்போது 65 வகையான பெப்டைட்களின் அமினோ அமில வரிசைகளை பரிந்துரை செய்துள்ளனர். இவைகள் மனிதர்களுக்கு நீடித்த நோயெதிர்ப்பு சக்தியை வழங்கலாம் என நம்பிக்கை தெரிவித்துள்ளனர். அடுத்த கட்டமாக, பரிந்துரைக்கப்பட்ட இந்த மாதிரி வரிசைகளை எலிகளில் சோதித்து, அவற்றின் பாதுகாப்பு மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை ஆய்வு செய்ய முடிவெடுத்துள்ளனர்.

“எங்கள் அணுகுமுறை, வெற்றிகரமாக இருந்தால், SARS-CoV-2 மட்டுமல்ல, எதிர்காலத்தில் வெளிவரக்கூடிய பிற கொரோனா வைரஸ்களுக்கும் எதிராக பாதுகாப்புக்கு வழிவகுக்கும்” என்று ஆய்வின் முன்னணி எழுத்தாளர் மார்க் யர்மார்கோவிச் கூறினார். நன்று!

தமிழில்: லயா