டெல்லி: கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்த உள்துறை அமைச்சர் அமித் ஷா விரைவில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை தெரிவித்துள்ளது.

அவர் ஆகஸ்டு 17ம் தேதி கொரோனா தொற்று காரணமாக டெல்லியில் உள்ள பிரபலமான எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது அவரது உடல்நலத்தில் முன்னேற்றம் ஏற்பட்டு உள்ளது.

அவர் நலமுடன் உள்ளார். ஓய்வு தேவை என்பதால் மருத்துவர்களின் கண்காணிப்பில் இருப்பார் என்று கூறப்பட்டது. ஆனால் அவர் பூரண நலம் பெற்றுவிட்டார், விரைவில் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்று எய்ம்ஸ் மருத்துவமனை கூறி உள்ளது.

இது குறித்து செய்திக்குறிப்பு ஒன்றையும் மருத்துவமனை வெளியிட்டு உள்ளார். அமித் ஷா குணம் பெற்றுவிட்டார், மிக விரைவில் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.