டெல்லி: த்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு இன்று அதிகாலை மூச்சுத்திணறல் ஏற்பட்டதால், உடனடியாக மருத்ருதுவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சமீபத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட  அமித்ஷா, நோய் குணமடைந்து வீடு திரும்பினார். தொடர்ந்து அரசு அலுவல்களில் பங்கேற்று வருகிறார்.
இந்த நிலையில், இன்று அதிகாலை 2 மணி அளவில் அவருக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டதாக கூறப்படு கிறது. இதையடுத்து, அவர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். இது டெல்லியில் பரபரப்பை ஏற்படுத்திஉள்ளது.