டில்லி:

பாஜக தலைவர் அமித்ஷா இன்று ராமநாதபுரம் வருகிறார். அங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள  பாரதிய ஜனதா வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் கூட்டத்தில் கலந்துகொண்டு, அவர்களை சந்தித்து பேசுகிறார்.

பாஜக சார்பில் நாகை, சிவகங்கை, ராமநாதபுரம் மக்களவைத் தொகுதிகளுக் கான வாக்குச்சாவடி முகவர்கள் கலந்தாய்வுக் கூட்டம் ராமநாதபுரம் பட்டிணம் காத்தானில் இன்று  நடைபெறுகிறது. இதற்காக தனியார் இடத்தில் பிரமாண்ட பந்தலும் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக அமித்ஷா விமானம் மூலம் மதுரை வந்து, அங்கிருந்து ஹெலிகாப்டரில் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் வளாக தளத்தில் இறங்குகிறார்.  அங்கிருந்து அவர் காரில் கூட்டம் நடைபெறும் மேடைக்கு செல்கிறார்.

இந்த கூட்டத்தில் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், பாஜக தேசியச் செயலர் முரளிதரராவ், தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் உள்பட பலர் பங்கேற்கின்றனர்.

அமித்ஷா வருகையை முன்னிட்டு ராமநாதபுரம் பகுதியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.