டில்லி:

லைவர்களின் சிலையை உடைப்பதற்கு பா.ஜ.க. அரசு ஒருபோதும் அனுமதிக்காது என்றும், சிலைகளை உடைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வன்முறையில் ஈடுபட்டு வரும் பாஜகவிருக்கு,  பா.ஜ.க. தலைவர் அமித்ஷா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

திரிபுராவில் 25ஆண்டுகால கம்யூனிஸ்டு ஆட்சியை வீழ்த்தி பாரதியஜனதா ஆட்சி கட்டிலை கைப்பற்றியதை தொடர்ந்து, அங்கிருந்த லெனின் சிலை அகற்றப்பட்டது.  இந்நிலையில், தமிழகத்தை சேர்ந்த பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா,  ‘திரிபுராவில் இன்று லெனின் சிலை உடைக்கப்பட்டது. நாளை தமிழகத்தில் சாதி வெறியர் ஈ.வெ.ராமசாமி சிலை’ எனத் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டார்.

ராஜாவின் பதிவு தமிழக மக்களிடத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. தமிழக அரசியல் கட்சி தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவிததனர். அதையடுத்து எச்.ராஜாவின் பதிவு நீக்கப்பட்டது. இன்று மன்னிப்பும் கோரியிருக்கிறார்.  இந்நிலையில், நேற்று இரவு திருப்பத்தூரில் பெரியார் சிலை பாஜகவினரால் உடைக்கப்பட்டது.

இதன் காரணமாக தமிழகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. சிலை உடைப்பு விவகாரம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், பிரதமர் மோடி, இதுகுறித்து உடனடி நடவடிக்கை எடுக்க மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு உத்தரவிட்டிருந்தார்.  அதைத்தொடர்ந்து மத்திய அரசும், அனைத்தும் மாநில அரசுகளுக்கும் சிலை விவகாரத்தில் கடும் நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தியது.

இந்நிலையில், பா.ஜ.க. தேசியத் தலைவர் அமித்ஷா தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்துப் பதிவிட்டுள்ளார்.

அதில் சில தினங்களாக நடைபெற்றுவரும் சிலை உடைப்புச் சம்பவங்கள் மிகவும் அதிருப்தி அளிப்பதாக உள்ளது இதுபோன்ற செயல்களுக்கு பா.ஜ.க. ஒருபோதும் ஆதரவு அளிக்காது.

திரிபுரா மற்றும் தமிழகத்தில் உள்ள பா.ஜ.க-வினரிடம் கட்சி மேலிடம் விசாரணை நடத்தும். அப்படி இந்தச் சம்பவங்களில் பா.ஜ.க-வினர் ஈடுபட்டிருப்பதாகத் தெரிந்தால் கட்சி அவர்கள் மேல் கடுமையான நடவடிக்கை எடுக்கும்.

வெளிப்படையான, ஆக்கப்பூர்வமான அரசியலை மேற்கொள்வதில் பா.ஜ.க. உறுதியாக உள்ளது, இது போன்ற செயல்களின் மூலம் மக்களின் வாழ்க்கையும் புதிய இந்தியாவை உருவாக்கும் முயற்சிகளும் பாதிக்கப்படுகிறது என அவர் பதிவிட்டிருக்கிறார்.