இந்தியத் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான அமிதாப் பச்சனுக்கு ஜூலை 11-ம் தேதி இரவு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
அவரைத் தொடர்ந்து அபிஷேக் பச்சனுக்குக் கொரோனா தொற்று உறுதியாகவே, இருவரும் மும்பை நானாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுச் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இந்நிலையில் நேற்று (ஜூலை 23) மாலை அமிதாப் பச்சனுக்கு எடுக்கப்பட்ட கரோனா பரிசோதனையில் நெகட்டிவ் என்று வந்திருப்பதாகவும், விரைவில் வீடு திரும்புவார் எனவும் தகவல் வெளியானது.
இந்தச் செய்தி தொடர்பாக அமிதாப் பச்சன் தனது ட்விட்டர் பதிவில், “இந்தச் செய்தி தவறானது, பொறுப்பற்றது, போலியானது, மாற்றமுடியாத பொய்” என்று தெரிவித்துள்ளார்.


இந்த ட்வீட்டின் மூலம் அவருக்குக் கொரோனா தொற்று இன்னும் சரியாகவில்லை என்பது தெளிவாகவுள்ளது.