சென்னை:
ங்கடலில் உருவான அம்பான் புயல் சூப்பர் புயலாக மாறி உள்ள நிலையில், தமிழகத்தின் 8 மாவட்டங்களில் நல்ல மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்து உள்ளது.
வங்க கடலில் கடநத மூன்று நாட்களுக்கு முன் உருவான அம்பான் புயல், தற்போது தெற்கு வங்கக்கடலில் சென்னைக்கு கிழக்கே 950 கிமீ தொலைவில்  மையம் கொண்டுள்ளது. அம்பான் புயல் தற்போது அதி தீவிர சூப்பர் புயலாக மாறியுள்ளது.

இந்த நிலையில் வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், அம்பான் புயல் தமிழகத்தை தாக்காது , இது  வங்கத்தின் டிகா- வங்கதேசத்தின் ஹாதியா தீவுகளுக்கு இடையே இந்த புயல்  20ம் தேதி கரையை கடக்கும் என தெரிவித்து உள்ளாது.
இந்த புயல் காரணமாக கடந்த 2 நாட்களாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்து வரும் நிலையில், நேற்று நள்ளிரவு சென்னையின் சில பகுதிகளில் மட்டும் மழை பெய்தது.
புயல் காரணமாக, தமிழகத்தில் கடலோர மாவட்டங்களான  சென்னை, கடலூர், நாகப்பட்டினம், கன்னியாகுமரி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் நல்ல மழை பெய்யும். அங்கு கடல் அலைகள் மிகவும் கொந்தளிப்புடன் காணப்பட வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும், மேற்கு கடற்கரை பகுதி அதேபோல் மேற்கு கடற்கரை சாலையை ஒட்டிய பகுதிகளிலும் தீவிரமாக மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது.
மீனவர்கள் வங்க கடல் பகுதியில் மீன் பிடிப்பதை தவிர்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலை பகுதி அதேபோல் இந்த புயல் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி இருக்கும் மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால் கொங்கு மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. தருமபுரி, திருப்பூர், கோயம்புத்தூர், ஈரோடு, நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் இதனால் மழை பெய்யும். அங்கு சூறாவளி காற்றுடன் மழை பெய்யும்.
சென்னை சாரல் சென்னையில் இன்னும் சில நாட்களுக்கு சாரல் மழை பெய்யும். அதேபோல் டெல்டா மாவட்டங்களில் நல்ல மழைக்கு வாய்ப்பு இருக்கிறது. அடுத்த 4 நாட்களுக்கு டெல்டா மாவட்டங்களில் தீவிரமாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இன்று, தமிழகத்தில் வெப்பச்சலனத்தால், கோவை, திருப்பூர், நீலகிரி, கன்னியாகுமரி, விருதுநகர், தேனி நெல்லை, திண்டுக்கல் ஆகிய எட்டு மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது எனவும் சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.