திரை நட்சத்திரங்கள் கலந்துக் கொள்ளும் இரவு விருந்துகள் பல்வேறு நட்சத்திர ஓட்டல்களில் நடந்து வருகிறது. சமீபத்தில் போலீசுக்கு தொடர் தகவல் வந்த நிலையில் இதில் தவறு நடக்கிறது என கண்டறியப்பட்டது .

மும்பையில் நடைபெற்ற இந்த சோதனையில் இரண்டு நடிகைகள் விபச்சார வழக்கில் கைது செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதில் இந்தி பிக்பாஸ் 13 வது சீசனில் பங்கேற்றவர் அர்ஹான் கான். இவரின் முன்னாள் காதலி அம்ரிதா தான்னோ விபச்சார வழக்கில் கைதாகி உள்ளார்.

காவல்துறையினர் சோதனையின் போது உள்ளாடையுடன் அம்ரிதா தப்பித்து ஓட முயற்சித்துள்ளார். துரத்தி சென்று பெண் போலீசார் அவரை மடக்கி பிடித்து கைது செய்துள்ளனர். அம்ரிதாவுடன் மேலும் ஒரு நடிகை ரிச்சா சிங் என்பவரும் கைது செய்துள்ளனர்.

அர்ஹான் கான், தன்னிடம் இருந்து ரூ.5 லட்சம் ஏமாற்றிவிட்டதாக புகார் கூறிய நடிகை அம்ரிதா, இது தொடர்பாக போலீசில் புகார் அளித்து அர்ஹானை சிறையில் அடைக்கப்போவதாக கூறிய நிலையில், தற்போது அவரே சிறைக்கு சென்றிருப்பது குறிப்பிடத்தக்கது.