இந்தியாவில் நடைபெறும் சிறப்பான நிகழ்வுகளின் போது, அதனை கொண்டாடும் வகையில்/ சிறப்பிக்கும் வகையில் கேலிச்சித்திரங்கள் வெளியிடுவது அமுல் நிறுவனத்தின் வழக்கம்.

தற்போது அமுல் நிறுவனம் மறைந்த பாடகர் / நடிகர் எஸ்.பி.பி. அவர்களுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளது.

40,000+ பாடல்கள், எண்ணற்ற விருதுகள், நடிப்பு, எளிமையாக பழகும் குணம் என தமிழக மக்களின் மனதில் நீங்கா இடம் பெற்ற பாடகர் மற்றும் நடிகர் திரு. எஸ். பி. பாலசுப்பிரமணியம் அவர்களின் மறைவிற்கு அஞ்சலி செலுத்துகிறோம் என பதிவிட்டுள்ளனர்.

https://www.facebook.com/amultamilnadu/posts/194527172209425

மேலும் தமிழில் மண்ணில் இந்த காதலின்றி யாருமின்றி பாடலையும் இந்தியில் வெளியிடும் போது, ஏக் துஜே கே லியே படத்தில் இடம் பெற்ற தேரே மேரே பீச் மேய்ன் பாடலையும் இந்த சித்திரங்களுக்கு பயன்படுத்தி தங்களுடைய அஞ்சலியை செலுத்தியுள்ளனர்.