மதராசபட்டினம்’ திரைப்படம் மூலம் தமிழில் அறிமுகமானார் பிரிட்டிஷ் நடிகையான ஏமி ஜாக்சன்.

இவர் ஜார்ஜ் பனாயிடூ என்ற தொழிலதிபரைக் காதலித்து வந்தார். அப்போது கர்ப்பமானார். இந்த தம்பதியினருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.

இங்கிலாந்து நாட்டில் மார்ச் 22-ம் தேதி அம்மாக்கள் தினம் கொண்டாடப்பட்டது. இதனைத் தொடர்ந்து அம்மாவாகியுள்ள ஏமி ஜாக்சன் தனது இன்ஸ்டாகிராம் தன் குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் .