சென்னை,

ன்று இரவு  முழுவதும் சென்னையில் மழை தொடரும் என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கடந்த 3 நாட்களாக மழை பெய்து வருகிறது. இன்று காலை சற்று வெறிச்சிருந்த நிலையில் பிற்பகல் முதல் மழை விட்டு விட்டு பெய்து வருகிறது.  மேலும் மாலை முதல் தொடர்ந்து பெய்து வருகிறது.

இந்நிலையில், வெதர்மேன்  பிரதீப் ஜான் தன் முகநூலில் வெளியிட்ட பதிவில்,

”வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. சென்னையில் இன்று மாலை வரை நன்கு வெயில் அடித்த நிலையில், அதன்பின் பரவலாக மழைபெய்து வருகிறது. இனி, இரவு நேரத்தில் மழை தீவிரமாகும்.
வடசென்னை, மத்திய சென்னை, தென் சென்னை, ஓ.எம்.ஆர்., கிழக்கு கடற்கரை சாலை ஆகிய பகுதிகளில் மழை தொடங்கிவிட்டது, நேரம் செல்லச் செல்ல வலுவாக பெய்யும்.

ஒருபுறம் வட சென்னையில் இருந்து மேகங்கள் நகர்ந்தும், மற்றொருபுறம் மேற்குகில் இருந்து நகர்வதால், நேற்று இரவுபோல் லேசான மழையாக இல்லாமல், இரவு முழுவதும் மழை ‘நின்று பெய்யப்போகிறது’, நாம் தூங்கினாலும் மழை விழித்திருக்கும்” என்று அவர் கூறியுள்ளார்.