டெல்லி: 2020- 21-ம் ஆண்டில் ஊரக உள்ளாட்சி அமைப்பு நிதியாக  தமிழகத்துக்கு ரூ.3607 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதுதொடர்பாக நிதிஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,  ஊரக இந்தியாவுக்கு அதிகாரம் அளிப்பதற்காக பஞ்சாயத்துகளை டிஜிட்டல் மயமாக்கி வலுப்படுத்தும் வகையில், இ-கிராம் ஸ்வராஜ் என்னும் ஒருங்கிணைந்த தளத்தை (https://egramswaraj.gov.in/) பஞ்சாயத்து ராஜ் அமைச்ச கம் உருவாக்கியுள்ளது. இதன்மூலம், கிராம பஞ்சாயத்துகளில் மேற்கொள்ளப்படும் பணிகளை கண்காணிப்பதற்காகவும், மதிப்பிடுவதற்காகவும் இந்த தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

2020-21-ஆம் ஆண்டில், சுமார் 2.43 லட்சம் கிராம பஞ்சாயத்துகள் தங்களது வளர்ச்சி திட்டத்தை இ-கிராம் ஸ்வராஜ் தளத்தில் இறுதி செய்துள்ளன. சுமார் 1.24 லட்சம் கிராம பஞ்சாயத்துகள் இந்த தளத்தின் ஆன்லைன் பரிவர்த்தனை வசதியின் மூலம் பரிவர்த்தனைகள் செய்துள்ளன.

28 மாநிலங்களில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு நிதி உதவி வழங்க 15-வது நிதி ஆணையம் தன்னுடைய 2020-21-ஆம் ஆண்டுக்கான  நிதி பட்டியலில் தெரிவித்த உள்ளது.

அதன்படி,  2020 ஜூன் 17 மற்றும் 2020 ஜூலை 15 ஆகிய தேதிகளில் தலா ரூபாய் 15187.50 கோடி நிதி அமைச்சகத்தால் மாநிலங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இதில் தமிழ்நாட்டுக்கான , 2020-21-ஆம் ஆண்டுக்கான மொத்த ஒதுக்கீடு ரூபாய் 3607 கோடி.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.