பெங்களூர்:

ண்டனை சேர்ந்த 34 வயதான பெண்மணி, ஆன்லைனில் தான் ஏமாற்றப்பட்டதை அறியாமலேயே, தனது வருங்கால கனவரை சந்திக்கும் ஆர்வத்தில் இந்தியா வந்தடைந்தார்.

வைட்ஃபீல்டில் உள்ள ஒரு புகழ்பெற்ற பன்னாட்டு நிறுவனத்தில் பணிபுரியும் ரியா சென் (பெயர் மாற்றப்பட்டது), 13 பரிவர்த்தனைகள் மூலம் 48 மணி நேரத்திற்குள் ரூ .7.75 லட்சத்தை இழந்தார். இதுகுறித்து ஒயிட்ஃபீல்ட் போலீசில் அவர் புகார் அளித்துள்ளார். இதையடுத்து, ஐடி சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் பண மோசடி குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த நவம்பர் 29-ஆம் தேதி, ரியா தனது சுயவிவரத்தை ஜீவன்சதி.காம் என்ற மேட்ரிமோனியல் இணையதளத்தில் பதிவேற்றியிருந்தார். இதையடுத்து, கரன்வீர் தாக்கூர் என்ற நபர் ரியா தொடர்பு கொண்டார். பின்னர் இருவரும் வாட்ஸ்அப்பில் அரட்டை அடிக்க தொடங்கினார்.

தாகூர் லண்டனில் உள்ள பிரைஸ்வாட்டர்ஹவுஸ் கூப்பர்ஸ் (பி.டபிள்யூ.சி) நிறுவனத்தில் கார்ப்பரேட் கணக்கு மேலாளராக இருப்பதாகக் கூறினார். அவர் உத்தரகண்டில் உள்ள பித்தோராகரைச் சேர்ந்தவர் என்றும், அவர் தனது தாயுடன் லண்டனில் வசித்து வந்தார் என்றும் பகிர்ந்து கொண்டார்.

அவரது பேச்சால் ஈர்க்கப்பட்ட ரியாவும், அவருடன் தனது விவரங்களை பகிர்ந்து கொண்டார். தாகூர் தனது குடும்ப புகைப்படங்களை அனுப்பியுள்ளார்.

இந்நிலையில், கடந்த டிசம்பர் 24 ஆம் தேதி காலை, தாகூரின் சகோதரி தியாவிடம் இருந்து ரியாவுக்கு அழைப்பு வந்தது, அவர் டெல்லி விமான நிலையத்தை அடைந்து விட்டதாகவும், பெங்களூருவுக்கு விமானம் காலை 11 மணிக்கு திட்டமிடப்பட்டதாகவும் கூறினார். மேலும் தான் கூடுதல் லாக்கேஜ் உடன் வந்து விட்டதாகவும், அனுமதிக்கப்பட்ட எடை 22 கிலோ மட்டுமே என்றும் அந்த பெண் கூறினார். லாக்கேஜ்களுக்காக கூடுதலாக ரூ .50,000 செலுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

இதுமட்டுமின்றி, அதே பெண் மீண்டும் ரியாவை அழைத்து, அந்த லாக்கேஜ்ஜில் ரூ .6.61 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகள் மற்றும் 60,000 பவுண்டுகள் ரொக்கம் இருப்பதாக கூறினார். இதை நம்பிய ரியா, அந்தத் தொகையை செலுத்தினார்.

இதையடுத்து, ரியா மூன்று மணி நேரம் கழித்து தாகூரை அழைத்தபோது, ​​அவர் பதிலளிக்கவில்லை. அவர் அந்தப் பெண்ணை அழைக்க முயன்றார். ஆனால் அவரது தொலைபேசி அணைக்கப்பட்டது. பின்னர், தனது பணத்தை திருப்பித் தருமாறு பல செய்திகளை தாக்கூருக்கு அனுப்பினார். எல்லா செய்திகளும் பார்க்கப்பட்டன, ஆனால் அவற்றில் எதற்கும் அவர் பதிலளிக்கவில்லை. இறுதியாக, அவர் வைட்ஃபீல்ட் போலீசில் புகார் அளித்தார்.