டெல்லி: ஆஸ்திரேலியா போட்டியில் வெற்றி வாகை சூட காரணமாக திகழ்ந்த தமிழக வீரர்கள்,  சேலம் நடராஜன், வாஷிங்டன் சுந்தர் உள்பட 6 வீரர்களுக்கு தார் ஜீப் பரிசாக வழங்கப்படும் என மகேந்திரா கார் நிறுவன தலைவர் ஆனந்த் மகிந்திரா அறிவித்து உள்ளார்.

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான பிரிஸ்பேன் டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில்  தமிழகத்தைச் சேர்ந்தஇளம் வீரர்களான சேலம் நடராஜன், வாஷிங்டன் ஆகியோர் சிறப்பாக ஆடினர். அவர்களின் ஆட்டம் இந்திய வெற்றிக்கு உறுதுணையாக இருந்தது.

கடைசி போட்டியின்போது, ஆட்டத்தின்போது, முக்கிய  பேட்ஸ்மேன்கள் ஒவ்வொருவராக ஆட்டமிழந்த நிலையில், வாஷிங்டன் சுந்தர் மற்றும் ஷர்துல் தாகூர் இருவரும் பாட்னர்ஷிப் அமைத்து ரன் சேர்த்தனர். இருவரும் அடுத்தடுத்து அரைசதம் அடித்தனர். இதமட்டுமல்லாமல் பவுலிங்கில் 4 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார் ஷர்துல் தாக்கூர்.

அதேபோல் தமிழக வீரர் நடராஜன் அனைத்து வகை கிரிக்கெட்டிலும் அசத்தினார்.  மற்றொரு இந்திய வீரரான முகமது சிராஜ், தந்தை இறப்புக்குக் கூட வர முடியாமல், அங்கு விளையாடி, தொடர்ந்து விக்கெட்டுகளை வீழ்த்தி, அணியின் வெற்றிக்கு அடித்தளமிட்டார். இந்திய அணியின் இளம் வீரர்களின் கடுமையான முயற்சியில், இந்திய அணி கோப்பையைச் தட்டி வந்தது.

இதன் காரணமாக இந்திய அணிக்கு பாராட்டுக்களும் பரிசுகளும் குவிந்து வருகின்றன. இந்த நிலையில், இந்திய அணியின் வெற்றிக்கு வித்திட்ட இளம் வீரர்களான தமிழகத்தைச் சேர்ந்த சேலம் நடராஜன், வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாக்கூர், சிராஜ், நவ்தீப் சைனி, சுப்மன் கில் ஆகியோருக்கு  தார் கார் பரிசு வழங்குவதாக மஹிந்திரா கார் நிறுவன உரிமையாளர் ஆனந்த் மஹிந்திரா அறிவித்து உள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டிவிட் பதிவில்,   இளைஞர்களை ஊக்குவிக்கும் விதமாக நடராஜன், வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாக்கூர், சிராஜ், நவ்தீப் சைனி, சுப்மன் கில் ஆகியோருக்கு மஹிந்திரா தார் காரை பரிசளிக்க உள்ளேன் என தெரிவித்துள்ளார்.