பாபநாசம்’, ‘2.0’, ‘விஸ்வரூபம்’ உள்ளிட்ட படங்களில் நடித்திருப்பவர் ஆனந்த் மஹாதேவன்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு சமூக வலைதளங்களில் இவரது புகைப்படத்தை பதிவிட்டு ‘16 முறை தேசிய விருது பெற்ற நடிகர் கடந்த ஏப்ரல் 17ஆம் தேதி அன்று இறந்துவிட்டார்’ என்று ஒரு செய்தி வைரலாக பரவிவந்தது.
இந்நிலையில் இது குறித்து ஆனந்த் மஹாதேவன் ஒவ்வொரு நடிகருக்கும் தான் வாழும்போதே ஊடகங்களால் மரணம் ஏற்படவேண்டும் என்று நினைக்கிறேன். இது என்னுடைய முறை. இதையெல்லாம் யார் தேர்ந்தெடுப்பது என்று தெரிந்து கொள்ள விரும்புகிறேன். ஆனால் இதில் எனக்கு பிடித்த விஷயம் அந்த 16 முறை தேசிய விருது தான். என்னிடம் ஏற்கெனவே இரண்டு உள்ளன. இன்னும் நான் 14 விருதுகள் பெறவேண்டும். இதன் அர்த்தம் இதற்காக நான் நீண்ட நாட்கள் வாழவேண்டும் என்பதே. இது போன்ற கற்பனை செய்திகளை பரப்புவதை தயவுசெய்து நிறுத்துங்கள் என வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் பொருட்டு கூறியுள்ளார்.