சென்னை,

பா.ம.க. இளைஞர் அணி தலைவர் தற்போது நலமாக இருக்கிறார். நாளை வீடு திரும்புகிறார் என்று பா.ம.க. தலைமைநிலையம் செய்தி வெளியிட்டு உள்ளது.

திடீர் உடல்நலமில்லாமல் பெங்களூரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அன்புமணி ராமதாஸ் தற்போது நலமாக உள்ளார். நாளை வீடு திரும்புகிறார் என்று பா.ம.க. தலைமை நிலையம் அறிவித்து உள்ளது.

இதுகுறித்து பாமக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணித் தலைவரும், தருமபுரி தொகுதி மக்களவை உறுப்பினருமான மருத்துவர் அன்புமணி இராமதாஸ் நேற்று காலை தருமபுரி தொகுதியில் 15-க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.

ஓய்வின்றி தொடர்ச்சியாக நிகழ்ச்சிகளில் பங்கேற்றதால் அவருக்கு சோர்வும், லேசான தலைச்சுற்றலும் ஏற்பட்டது.

இதையடுத்து பெங்களூரிலுள்ள நாராயணா ஹிருதயாலயா மருத்துவமனையில் அவருக்கு முழுமையான மருத்துவ ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

அதில் அவருக்கு எந்த பாதிப்பும் இல்லையென்பதும், உடல்நிலை இயல்பாக இருப்பதும் தெரியவந்தது. எனினும், அவருக்கு ஓய்வு தேவை என்பதால் ஒரு நாள் ஓய்வு எடுக்கும்படி மருத்துவர்கள் பரிந்துரைத்தனர்.

அதன்படி இன்று ஒரு நாள் ஓய்வுக்கு பிறகு மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் நாளை இல்லம் திரும்புவார் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு கூறப்பட்டு உள்ளது.