சென்னை,

வைரமுத்துவின் ஆண்டாள் குறித்த சர்ச்சை பேச்சு குறித்து சென்னையில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது மேலும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஆண்டாள் குறித்து கவிஞர் வைரமுத்து பேசியதற்கு இந்து அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.  வைரமுத்து மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், சமுதாய நல்லிணக்க பேரவையைச் சேர்ந்த முருகானந்தம் என்பவர், வைரமுத்து மீது புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின் பேரில்,  சென்னை கொளத்தூர் காவல்நிலையத்தில் வைரமுத்து மீது  3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஏற்கனவே ராஜபாளையம் காவல் நிலையத்தில், ராஜபாளையம் இந்து முன்னணி நகர செயலாளர் சூரி  கொடுத்த புகாரின் பேரில் 153 (A), 295 (A), மற்றும் 505 (part II) ஆகிய 3 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இதுமட்டுமின்றி சிந்தாரிப்பேட்டை காவல் நிலையத்திலும் வழக்கு பதியப்பட்டுள்ளது.  இந்நிலையில் வைரமுத்து மீது மேலும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

சிவசேனா கட்சியின் மாவட்ட தலைவர் பிரமுகர் வேணுகோபால் கொடுத்த புகாரையடுத்து,  ஆண்டாள் குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்ததாக ஆர்.கே நகர் காவல்நிலையத்திலும் 2 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது