தி.மு.க. பிரமுகர் ஜெகத்ரட்சகன் ஒரு விசக் கிருமி என்று   தி.மு.க.வினர் பலரே சமூகவலைதளங்களில் பதிவிட்டுவருவது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஆழ்வார்களில் ஒருவரான ஆண்டாளை, “தாசி” என குறிப்பிட்டு தினமணி இதழில் திரைப்பாடலாசிரியர் வைரமுத்து கட்டுரை எழுதியதாக சர்ச்சை கிளம்பியது. இன்னொரு அறிஞரின் கருத்தையே தான் சுட்டிக்காட்டியதாக வைரமுத்து தெரிவித்தார்.

ஆனால் பா.ஜ.க.வின் எச்.ராஜா, பிரபல சாமியார் நித்தியானந்தாவின் சீடர்கள் உள்ளிட்டோர் வைரமுத்துவை மிகவும் கீழ்த்தரமாக விமர்சித்தனர்.

இந்த நிலையில் தி.மு.க. தலைவர்களில் ஒருவரான முன்னாள் அமைச்சர் ஜெகத்ரட்சகன் இந்த விவகாரம் குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.

அதில் “கடந்த 10 நாட்களாய் படர்ந்த வேதனையின் விளைவாய் உண்ணா நோன்பு போராட்டத்தில் ஈடுபட்டு தம்மை வருத்திக்கொள்ள முனைந்த எம் வழிபாட்டுக்குரிய ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் சுவாமிகள், தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் மனைவி துர்கா விண்ணப்பித்து கேட்டுக்கொண்டதன் பேரில், தம் உண்ணா நோன்பை கைவிட்டுள்ளார்கள்” என்றும் தெரிவித்தார்.

இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இத  குறித்து கடந்த 20ம் தேதி செய்தி வெளியிட்டிருந்தோம்.

இந்த நிலையில், ஜெகத்ரட்சனின் அதே அறிக்கையில் குறிப்பிட்டிருந்த வேறு பல வார்த்தைகள், தீவிர தி.மு.க. தொண்டர்களை புண்படுத்தியிருப்பதாக கூறப்படுகிறது.

இதையடுத்து ஜெகத்ரட்சகனுக்கு சமூகவலைதளங்களில் திமுகவினர் பலர் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.

அவர்களில் ஒருவரான தி.மு.க. தலைமைக் கழக பேச்சாளர் சின்னமனூர் புகழேந்தி  தனது முகநூல் பக்கத்தில் ஜெகத்ரட்சகனை கடுமையாக சாடியுள்ளார்.

ஜெகத்ரட்சகன்

அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது:

“வைணவத்திலகம் ஜெகத்ரட்சகன் ஆண்டாளை விமர்சித்த கவிஞர்வைரமுத்துவை கண்டித்து யாருக்கோ திரைமறைவு வெண்சாமரம் வீசியுள்ளார்.

வைரமுத்து மீது கொலை வெறித்தாக்குதல் செய்வேன் என்ற எந்த பார்ப்பானையும் எச்சராஜாவையும் கண்டிக்காத நன்கொடை வாங்காத!???? கல்வி வள்ளலான ஜெகத் வைணவர்களுக்கு ஆதரவாகப் தட்டை திருப்பிவைத்து தட்டி இருப்பது தான்   வேடிக்கையிலும் வேடிக்கை.

வைணவர்கள் மனம்புண்பட்டு விழிகளில் கண்ணீர் வழிந்தோடுகிறதாம்.!!!!

அண்ணாவை திருடன் என்றபோது கண்ணிர் ஓடவில்லையோ???
இப்படி பேசியதால் தான் தொண்டையில் ஓட்டை போட்டு சாப்பாடு பேசமுடியாமல் இறங்குகிறது என்று தலைவரை எச்சை பேசும் போது கண்ணீர் வடியவில்லையோ????
திருப்பதிக்கு உன் அண்ணனை கூட்டிட்டு போய் ஆட்டைய போட்டுவிடாதே என்று தளபதியை பேசும் போது கண்ணிர் வடியவில்லை ஜெகத் அய்யாவுக்கு!!!

உன்னையும் என்னையும் சேர்த்து சூத்திரன் என உன் வேதங்களும், பார்ப்பனர்களும் கல்எறிந்த போது எங்கே போனார் இந்த ஜெகத்????

தலைவர்கலைஞர் நடமாட்டம் இருந்த போது சுருட்டிய வால் இப்போது ஆட காரணம் என்ன???

சின்னமனூர் புகழேந்தி

சூத்திர இழிவை ஒழிக்க எத்தனை பார்ப்பான் தயாராயிருக்கிறான் ,
3% சதவீதமுள்ள , தர்ப்பைப்புல்லை மட்டுமே ஆயுதமாக்க் கொண்டவன் ,
ஆயுதத்தையே விளையாட்டு கருவியாக பயன்படுத்திய வீரத்தமிழ் பரம்பரை கவிஞரை இலக்கியப்புலமை வாய்ந்த வைரமுத்துவை கொல்வேன் என்கிறான் இவர்களுக்கு அந்த தைரியத்தை யார் கொடுத்தது?

சின்னமனூர் புகழேந்தியின் முகநூல் பதிவு

 

நீங்களும் நானும் இந்து எனச்சொன்னால் பார்ப்பனன் கருத்துப்படி நாம் சூத்திரன். இதை ஏற்றுக்கொள்ளும் தமிழர்கள் இருக்கும் வரைக்கும் பார்ப்பனன் ஆட்டம் போடத்தான் செய்வான்.

பச்சை செடிக்கும் பச்சை பாம்புக்கும் வித்தியாசம் தெரியாதவன் திமுக மத்திய அமைச்சரவையில் இருந்து என்ன லாபம்!!!

விசக்கிருமிகள் இன்னும் நம்மில் இருப்பதாலேயே கைபர்போலன்கணவாய் வழியே வந்தவன் , நம்மையே கொலை செய்வேன் என்கிறான்
திராவிட தலைவர்களை இழிவுபடுத்துகிறான்

பெட்டிபடுக்கைகளை தயார் பண்ணி #ஆன்மீக_அரசியல் செய்ய தயார்???? என்றால் சென்றுவிடுங்கள்

வெண்ணைக்கு பதில் சுண்ணாம்பு தடவும் தப்பாட்டம் ஆடவேண்டாம்

மானமிகு சுயமரியாதைகாரர் தலைவன்கலைஞரின் கடைநிலை தம்பியாய் எச்சரிக்கை செய்கிறோம்

திராவிட பயிரில் விசக்கிருமி
பூச்சிமருந்து அடித்தே தீருவோம்”  என்று சின்னமனூர் புகழேந்தி தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.