நடிகை ரோஜா தற்போது ஆந்திராவின் நகரி தொகுதியின் எம்எல்ஏவாக இருக்கிறார். கொரோனா தடுப்பு பணிகளில் தீவிரமாக செயல்பட்டு வருகிறார் ரோஜா . களத்தில் இறங்கி தானே கிருமி நாசினி மருந்துகளை தெளித்தார் ரோஜா. அந்த வீடியோ அவரை பாராட்டும் விதமாக வைரலாக பரவியது .
இந்நிலையில் ரோஜா ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்க நடந்து சென்றபோது வழியில் அவரது கட்சியினர் பூக்களை தூவியுள்ளனர் .அதற்கு எந்த ஆட்சேபமும் தெரிவிக்காமல் நடந்து சென்ற வீடியோ தபோது வைரலாகி வருகிறது .
நெட்டிசன்கள் ரோஜாவை கடுமையாக ட்ரோல் செய்து வருகின்றனர் .
இந்நிலையில் ரோஜா உள்ளிட்ட 5 எம்எல்ஏ-க்களின் மீது வழக்கறிஞர் கிஷோர் என்பவர் ஆந்திர உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடுத்துள்ளார்.


அந்த வழக்கை காணொளி காட்சி மூலமாக விசாரித்த நீதிபதிகள் தேசிய தொற்று நிவாரண சட்டத்தை மீறிய ரோஜா உள்ளிட்ட 5 எம்எல்ஏக்களுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளார்.