ஐதராபாத்: ஆந்திராவில் இன்று 10,418 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது.

இது குறித்து ஆந்திர மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது: மாநிலத்தில் இன்று 10,418 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த கொரோனா பாதிப்பு 5,27,512 ஆக அதிகரித்துள்ளது.

மாநிலத்தில் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4,634 ஆக உள்ளது. ஒட்டு மொத்தமாக 97,271 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பாதிப்பில் இருந்து இன்று மட்டும் 9,842 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

இதுவரை 4,25,607 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.