ஐதராபாத்: ஆந்திராவில் கொரோனா தொற்றால் இன்று ஒரு நாளில் மட்டும் 8,601 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

ஆந்திர மாநிலத்தில் கொரோனா தொற்று குறைந்திருப்பது போன்று காணப்பட்டாலும் சில வாரங்களாக பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் சுகாதாரத்துறை அதிகாரிகள் முயற்சி எடுத்து வருகின்றனர்.

இந் நிலையில், இன்று ஒரே நாளில் மட்டும் 8,601 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கொரோனா பாதித்தோரின் ஒட்டுமொத்த எண்ணிக்கையானது 3,61,712 ஆக அதிகரித்து உள்ளது. 86 பேர் உயிரிழந்துள்ளனர். ஒட்டு மொத்த பலி எண்ணிக்கை 3,368 ஆக உள்ளது.

8,741 பேர் கொரோனா தொற்றிலிருந்து மீண்டு, வீடு திரும்பிவிட்டனர். இதன் மூலம் குணம் பெற்றவர்களின் ஒட்டு மொத்த எண்ணிக்கை 2,68,828 ஆக உள்ளது. அது மட்டுமின்றி, 89,516 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.