விசாகப்பட்டினம்:
ந்திராவில் அரசின் தடையை மீறி நடைபெற்ற சேவல் சண்டையை ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி எம்எல்ஏ சிர்லா ஜாகி ரெட்டி துவக்கி வைத்துள்ளார்.
.

கோதாவரி, கிருஷ்ணா, குண்டூர் ஆகிய இடங்களில் சேவல் காலில் கத்திகளை கட்டி, கோடிக்காணக்கான ரூபாய் பந்தயமாக வைத்து சேவல் சண்டை நடத்துவது வழக்கம். இந்த சண்டைக்கு உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

இருப்பினும் உள்ளூர் பிரதிநிதிகள் ஆதரவுடன் இந்தாண்டு சேவல் சண்டை நடைபெற்றுள்ளது இதில், ஆயிரக்கணக்கான மக்கள் ஆர்வமுடம் பங்கேற்றுள்ளனர்.

இங்கு நடைபெற்ற ஒரு சேவல் சண்டையை ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சிஎம்எல்ஏ சிர்லா ஜாகி ரெட்டி துவக்கி வைத்துள்ளார்.